வரவேண்டும் காவிரித் தென்றலாக தீபாவளித் திருநாளில்

வானத்து தேவதையும் வரவேண்டும் பூமிக்கு
வறண்டுவிடாது தமிழ்க் கவிதையாறு பெருகி ஓட
ஒரு மேனகையின் புன்னகையில் புதுக் கவிதைகள் மலரும்
ஓர் ஊர்வசியின் வருகையில் உவமைகள் தாளமிடும்
ஓர் இரம்பை நடந்து வர காதல் கவி நடை பயிலும்
வானத்து தாரகைகளும் கண் சிமிட்ட எழுத்து
வண்ணக் கவிதைகளின் பூந் தோட்டம் ஆகும்

வண்ணப் பட்டுத்தி வரவேண்டும் வானத்து தேவதைகளே
கண்கவர் வண்ணப் பருத்திச் சேலையிலும் காவிரித் தென்றலாக
மின்னும் விழிச் சுடர் சின்ன இடை செவ்விதழ் சித்திரங்களே
கண்ணிமையா நீள்விழி கருங் குழலினரே
பொன்னொளி வீசும் புத்தாடைத் தீபாவளித்திரு நாளில்
விண்ணிறங்கி உலா வருவீர் எங்கள் வீதியிலே மென்தமிழ் போல !

~~~கல்பனா பாரதி~~~
கவிஞர்கள் அனைவருக்கும், நம் எண்ணங்களை ஏந்தி வரும்
எழுத்திற்கும் என் இனிய தீபாவளி வாழ்த்துக்கள்

எழுதியவர் : கல்பனா பாரதி (21-Oct-14, 10:00 am)
பார்வை : 120

மேலே