என் வானமடி நீ
நீலமேக வானம் -
என் சிந்தைமயக்கும் செந்தேகம்.
வெண்முகில் மறைத்த சூரியன் -
நின்துகில் போர்த்திய (இரு) சந்திரன்.
கார்மேகக் கூட்டம் -
நீ சிதறவிட்ட வெட்கம்.
கண்ணைப் பறிக்கும் மின்னொளி -
கோபம் தெறிக்கும் (உன்) கண்ணொளி.
பலத்த இடி -
சிரிப்பு வெடி.
புவிநனையும் மென்தூறல் -
என்மனம் குளிரும் புன்(னகை)சாரல்.
குளம் நிறைத்த நல்மழையால் புரண்டோடுது
கடும்வெள்ளம் -
மதி மயக்கிய நின்மொழியால் உருண்டோடுது
எனதுள்ளம்.
மழைவந்து சேர்ந்தபின் மண்ணில் ஓர் அமைதி -
அடிஏய்.!
உன் பார்வையில் தோற்பதா, என் வாழ்வின் நியதி.?!