என் வானமடி நீ

நீலமேக வானம் -
என் சிந்தைமயக்கும் செந்தேகம்.

வெண்முகில் மறைத்த சூரியன் -
நின்துகில் போர்த்திய (இரு) சந்திரன்.

கார்மேகக் கூட்டம் -
நீ சிதறவிட்ட வெட்கம்.

கண்ணைப் பறிக்கும் மின்னொளி -
கோபம் தெறிக்கும் (உன்) கண்ணொளி.

பலத்த இடி -
சிரிப்பு வெடி.

புவிநனையும் மென்தூறல் -
என்மனம் குளிரும் புன்(னகை)சாரல்.

குளம் நிறைத்த நல்மழையால் புரண்டோடுது
                                                                  கடும்வெள்ளம் -
மதி  மயக்கிய நின்மொழியால் உருண்டோடுது
                                                                   எனதுள்ளம்.

மழைவந்து சேர்ந்தபின் மண்ணில் ஓர் அமைதி - 
                                                                             அடிஏய்.!
உன் பார்வையில் தோற்பதா,  என் வாழ்வின் நியதி.?!

எழுதியவர் : அமீரன் (22-Oct-14, 8:31 pm)
பார்வை : 100

மேலே