மழை நீர்

மழை முகில் மழழை
அழக் கண்ட தவளை
தாலாட்டுப் பாடுகின்றன!

அழக் கண்ட மழழை
தளிர் இதழ் பார்த்து
செல்லமாய் சினுங்கின்றன!

மழை நீர் அருந்தி
தாகம் ஒழித்து - பூமியின்
ஏப்பம் இடியாகின!

பூமித் துழையில்
கும்பி நிரைத்து
நட்ட மரங்கள் செழிப்பாயின!

ஆழக் கடலும்
கடனை மீட்டு
எழுந்தாடிக் களித்தன!.

ஓடை வழிகள்
சல சல என்றே
விழுந்தே எழுந்து குதுகலமாயின!

கமம் செய் உழவன்
கவலை விட்டு- மகிழ்வாய்
மனையவள் நோக்கினான்!

ஜவ்ஹர்

எழுதியவர் : ஜவ்ஹர் (30-Oct-14, 10:20 pm)
Tanglish : mazhai neer
பார்வை : 637

சிறந்த கவிதைகள்

மேலே