உனக்கான கவிதைகள் பகுதி 9

'
அடிபெண்ணே உன் காதல்
ஒரு ஊமை கனவுகள்
ஒரு கவிஞனின் தனிமைகள்
பூவில் பனித்துளிகள் ...

ரசிக்கும் மனம் கொண்டு
உன்னிடம் நான் வந்தால்
உதாசின படுத்திவிட்டு
போகிறாய் உனக்கென்ன என்று

என் காதல் சொல்லிடவே
ஒரு வார்த்தை வரவில்லையே
எந்த மதுவிலும் உன்பார்வைபோல்
போதை தரவில்லையே

சின்ன மணிக்குயிலே
உன் சிரிப்பால் விழுந்தேனே
உன் மௌனத்தின் அர்த்தம் தேடி
நான் தினம் தினம் தொலைந்தேனே

எழுதியவர் : ருத்ரன் (3-Nov-14, 7:29 pm)
பார்வை : 116

மேலே