வாழ்வோவியம் -ரகு

விழிகளின் நீரை
எக்கரை கொண்டுத்
தடுக்கப்போகிறாய்

விரத்தியை
உள்வாங்கும்
இயலாமையை
எவ்வேலி கொண்டு
அடைக்கப் போகிறாய்

காட்டாற்று வெள்ளமாகித்
துயருன்னை துவம்சம்
செய்கிறதா

எப்போது
தப்பிக்கும் முயற்சியில்
தலைதூக்கத் துணிவாய்

நேற்றும்
இன்றையும்போல்
வெறுமையாக்கவேதானா
நாளையும்
ஒரு விடியலை
எதிர்நோக்குகிறாய்

இன்னிசைக்க
வந்த வாழ்வை
சாவுமேளத்தோடு
எங்கழைத்துச்செல்கிறாய்

வரம் தீர்வதற்குள்ளாகவே
ஏன் விழிபிதுங்குகிறாய்

கொஞ்சம் நம்பிக்கை
கொஞ்சம் எதிர்கொள்திறன்
இவ்வண்ணச்சாயங்கள்
கலந்தெடு

இதயத் தூரிகையில்
அழகாகிறது பார்-உன்
வாழ்வோவியம்!

எழுதியவர் : அ.ரகு (16-Nov-14, 7:43 pm)
பார்வை : 74

மேலே