பண்ணையார் மகள்

பண்ணையார் மகள்

அழகின் ,
ஒட்டுமொத்த குத்தகைக்காரி ..

எறும்புகள் ,
தேடும் சர்க்கரைக்கட்டி ..

பூக்கள் மலரும் ,
இவள் முகம் பார்த்தே ..

மீன்கள் முத்தமிட தவறாது ,
இவள் குளிக்கையில் ..

குடங்கள் போரிடும் ,
இவள் இடுப்பினில் ஏறி வலம் வர ..

ஆக்சிஜனும் நைட்ரஜனும் சண்டையிடும் ,
இவள் உடைகளை உலர்த்த ..

தூரி ஏற்றாத ஆலும் ,
இவள் வாய் செல்லாத வேலும் ஊரினில் இல்லை ..

மாண்டாலும் மணம் குறையாது ,
இவள் கூந்தல் ஏறும் மல்லிகை ..

ஆலய மணியும் தோற்கும் ,
இவள் கொலுசு ஒலியில் ..

சிலைகள் குழம்பும் ,
இவள் கோவில் சென்றால் ..

மழைத்துளிகள் ஏங்கும் ,
இவள் தேகம் தொட ..

பட்டுப்புழுக்கள் தற்கொலை செய்யும் ,
இவளுக்கு சேலை நெய்ய ..

பல் விழுந்த கிழமும் வெறிக்கும் ,
இவள் வீதியில் வருகையில் ..

மீன்கள் தானே விரும்பி மாட்டும் ,
இவள் தூண்டிலிடுகையில் ..

திருவிழாவில் இளைஞர் கூடும் ,
இவள் அழகினை ரசிக்க ..

நிலவும் தரைக்கு வரும் ,
இவள் மெத்தைக்கு செல்கையில் ..

நெற்கதிரும் தலை குனியும் ,
இவள் மீது நாணம் கொண்டு ..

பனைமரமும் போதை கொள்ளும் ,
இவள் கடந்து செல்லும்போது ..

மாட்டு வண்டிக்கும் இறக்கை முளைக்கும் ,
இவள் பயணிக்கும்போது ..

"பண்ணையார் மகள் "..

எழுதியவர் : கற்குவேல் பாலகுருசாமி (1-Dec-14, 8:42 pm)
பார்வை : 160

மேலே