முதல் காதல் பள்ளி பருவத்தில்

முதல் முறை பார்த்தேன் உன்னை தேவதை பெண்ணே
மறுநொடிஅம்புகள் எந்தன் இதயம் முன்னே
பச்சை தாவணியில் என் முன்னே நடந்தாய் - விழி மூட மறந்தேன்
பரீட்சை நேரத்தில் என் முன்னே அமர்ந்தாய் - விடை எழுத மறந்தேன்
அழகின் இலக்கணம் நான் உன்னில் கண்டது
இயற்கையின் சமர்ப்பணம் நீ என்னுள் கலந்தது
உன் பெயர் என் கண் விழியில் கவிதை ஆனது
என் பெயர் உன் பொன் வாழ்வில் கணவன் ஆனது
உன் இரு விழி பார்க்க தான் நான் இன்று வரை வாழ்த்தேனோ !!
உன் செவி வழி சேர்க்க தான் நான் மூன்று சொல் சேர்த்தேனோ !!
வானவில் பெற்ற வண்ணத்தில், நம்காதல் நிறம் வேண்டும் .
வசந்தம் என் வாழ்வினில் ,உன்னோடு நிகழ வேண்டும் .

எழுதியவர் : அரவிந்தன் (2-Dec-14, 4:42 pm)
சேர்த்தது : aravindhantcs
பார்வை : 263

மேலே