மௌனம் கலைத்திடு
நீ பேசாத ஒவ்வொரு நொடியும்
மௌனமாவது
என் நிமிடங்கள் மட்டும் அல்ல ,
என் நினைவுகளும் தான்...
உன் மௌனம் நிச்சயமாய்
தொடருமானால்-என்
நினைவுகள்
நிரந்தரமாய் மௌனமாகும்...
மௌனம் கலைத்திடு...
இல்லையேல்
இறுதியாக
என் மௌன ஊர்வலத்திலாவது
கலந்திடு....