யார் நாடாள வேண்டும்

யார் நாடாள வேண்டும்.

நல்லவர் நலம் வாழ இறையருள வேண்டும்.
வல்லவர் நா டாள தமிழருள வேண்டும்.
இம்மா நிலம் வாழ விதியருள வேண்டும்..
நம்முள் நாம் ஆள மதியருள வேண்டும்.

சுய நலம் ஆண்டு சுரண்டிய மண்ணை
நய வஞ்ச கத்தில் நலிந்திட்ட மண்ணை
சுய பலம் கொண்டு திருத்திடு தன்னை
நய நெஞ்ச கத்தில் இருத்திடும் உன்னை.

இல்லறம் துறந்தவர் அரசியல் ஞானி !
சொல்லறம் சிறந்தவர் அறவியல் பேணி.
வெல்லறம் துணிவார் வல்லுரம் ஊணி.
நல்லறம் புரிவார் பொல்லதும் நாணி.

துறவிக்கும் உறவுகள் உறவுக்குள் உரிமைகள்.
பிறந்தநம் தமிழ்மரபில் சிறந்தநன் சிறப்புகள்.
நாடெல்லாம் தம்மக்கள் வீடெல்லாம் நாடாக`
பாடெல்லாம் நமக்காக வேறென்ன தனக்காக.?

தன்னலம் மனதில் தான்சிறை அடைப்பாரார்
மண்ணலம் தனதாய் வன்முறை துடைப்பாரார்
அன்னவர் நினைவில் நம்குறை அறிவரார்.
அண்ணலின் கனவினை தன்நிறை செய்வரார்.
கொ.பெ.பி.அய்யா.

எழுதியவர் : கொ.பெ.பி.அய்யா. (11-Dec-14, 10:47 am)
பார்வை : 87

மேலே