சேவையில் சாரதி

சர்வீஸ் சாரதி - இதயவாசல் நிறுவனர்
---
மடியேந்தி தாலாட்டி,
பாராட்டி, சீராட்டி
அழகாக அமுதூட்டுவாய்!

இயலாத வயதிலே,
அணைப்பிற்கு ஏங்கினால்
ஆறுதல் மொழிகள் சொல்வாய்!

திக்கற்ற எளியோர்க்கு
கருணைமழை பொழிந்த உனை
இறைவனாய் பார்த்ததுண்டு!

திசைமாறும் இளையோர்க்கு
சேவைக்கு வழிசொல்ல
உன் 'இதயவாசல்' திறந்தாய்!

உனை அரங்கமே பாராட்ட
அழைக்கும் நேரம் பார்த்து
துயரத்தில் ஆழ்த்திச்சென்றாய்!

ஆரதியின் சேவையெல்லாம்
சாரதியின் கரங்களென
எந்நாளும் எடுத்துச்சொல்வோம்! - இல்லம்
எந்நாளும் எடுத்துச்சொல்லும்!

எழுதியவர் : Dr.C.R.Suriyakumar (18-Dec-14, 12:55 pm)
பார்வை : 515

மேலே