எங்கே சென்றாய் நீ

மௌனமாய் நீ இருந்து
மயக்கியே விட்டாய் நீ.
கவனமாய் நான் இருந்தும்
மயங்கியே போனேன் நான்.
காதலியாய் நீ வந்து
இனிமைகள் பல தந்து..
என்னை நீ அடைந்து
உன்னை நான் சுவைத்து..
ஆண்டுகள் சில சென்று
ஆனந்தம் பல பெற்று..
அப்படியே விட்டு விட்டு
அனாதையாய் ஆக்கி விட்டு
நாம் காதலுக்கு முற்று
புள்ளி வைத்து விட்டு..
என் மயக்கத்தை மறந்து
விட்டு எங்கே சென்றாய் நீ?