அவள் நானமே மதுப் பானமே

கண்கள் நிலம் நோக்கும்
கன்னம் கனலாய் சிவக்கும்
அன்னம் கால்கள் வரைந்தாடும்
உண்ணும் உதடு உறைந்துஊறும்
தண்ணும்(குளிர்ந்த) உதிரம் கொதித்துஅடங்கும்
மின்னும் தேகம் மறைந்துவாட்டும்
எண்ணும் இதயம் பறைஅறைந்துதுடிக்கும்
இன்னும் இவள் கைகள் என்னை நாடவில்லை!
நானும் அவள் நானத்தை கலைக்கவில்லை!
ஏன் என்னும் வினா வந்தால்
விடை வரும்
வெட்கம்
பாவை பேசும் தர்க்கம்
ஆண் பார்வைக்கு அது சொர்க்கம்
காதல் மொழியில் அது என்றும் இருக்கும்

எழுதியவர் : சூர்யா (23-Dec-14, 12:02 pm)
சேர்த்தது : சிவ சூர்யா
பார்வை : 435

மேலே