அறிவு

அறிவுடனேயே பிறக்கின்றோம்
அதனுடனேதான் வளர்கின்றோம்
அறிவை உடன் நாம் கொண்டிருந்தும்
அதன் அருமை உணரா அற்பமென
அறியாமை எனும் பேரிருளில்
அமிழ்ந்து நாளும் சாகின்றோம்
அறிவால் அறியா அறிவியலா ?
அறிவாய் இதை நீ அறிவாலே
அறிவின் அறிவியல் அறிந்தவர்கள்
அறிவியல் அறிஞர் ஆகின்றார்
அறிஞர் ஆனவர் அறிவாலே
செறிவை அடைந்து பயன்பட்டார்
அறிவில் செறிவு உடைத்தாயின்
அகிலம் உய்யும் இது திண்ணம்
அறியும் வரையில் அறிந்திடுவோம்
அறிவை அறிந்து தெளிந்திடுவோம்
-- அருள் ஸ்ரீ --