தேவதை சரணாலயம் - 5

உனக்காய் படைக்கப்பட்ட
கவிதைகள் கூட
உன்னை காதலிக்க
ஆரம்பித்து விட்டன போலும்!!
உன் பெயரை மட்டுமே
எழுத சொல்லி
கெஞ்சுகிறதே...
---------------------------------------------------------------------------------------------
நீ பேச
வேண்டிய
வார்த்தைகளை
கண்களால் பேசியதால்
உன் இதழ்கள்
முத்தங்களால்
பேசின....
----------------------------------------------------------------------------------------------
உன் அழகில்
மயங்கி விழுந்த எனக்கு
நிவாரணம் தான்
உன் முத்தம்...
----------------------------------------------------------------------------------------------
என்
தலையெழுத்தின்
பிழைகளை சரி செய்த
பிரம்மதேவி நீ...
----------------------------------------------------------------------------------------------
உன் கள்
பேச்சை பருகும்
மோசமான
குடிகாரன் நான்....
----------------------------------------------------------------------------------------------

எழுதியவர் : தவம் (7-Jan-15, 6:03 pm)
பார்வை : 88

மேலே