தை மகள் சொல்லிவிட்டாள்

பொங்கி வரும் பொங்கலோடு
பொங்கிடுவோம் புன்னகையோடு
கட்டுகட்டாய் கரும்புகளோடு
இனித்திடுவோம் அக் கூட்டத்தோடு..

பொங்கலோ பொங்கல் என்று
பொங்கி வரும் வேலையிலே
ஒரு மனதாய் குரல் கொடுத்து
பொங்கியே எழுந்திடுவோம்.

தை மகள் வந்து விட்டாள்
தமிழ் மகளாய் பிறந்து விட்டாள்
சாதி மதம் இல்லை என்று
பொங்கலில் காட்டிடுவோம்.

எழுதியவர் : அ. மன்சூர் அலி..ஆவடி,.சென்னை (14-Jan-15, 1:31 pm)
சேர்த்தது : மன்சூர் அலி
பார்வை : 82

மேலே