காற்றாடி காதல்
இரவானால் போதுமே
இமை மூட தோணுதே
கனவாக நீ வர
இரு கண்கள் ஏங்குதே
அதிகாலை வேளையில்
குளிர் வாட்டும் காலையில்
பனி தோய்ந்த பூவென
நினைத்தேங்கும் என்மனம்
நூல் கோர்த்த காற்றாடி
உன் விழி பார்த்தேன் அம்மாடி
ஓவியத்தின் நிழல் போல
ஒற்றைவரி கவி போல
உனை எண்ணி நான் இருக்கே
ஒரு பார்வை பார்த்தா என்ன?
இல்லை என்று நீ சொல்ல
இருக்குமென்று நான் ஏங்க
நூலறுந்த காற்றாடி
உன் நினைவறுந்ததா நாந்தான்டி..
-ஜோசப் அன்டன் ஜோர்ஜ்