என்ன மர்மம் செய்தாய் நீ

உன்னை நான் இன்று
மணகோலத்தில் கண்டவுடன்
மன்னித்து விடு என்கிறாய்
மன்னிக்கவே மாட்டேன் நான்.

மங்கலமாய் வாழ்ந்து விடு என
மனதார வாழ்த்தி விடுகிறேன்
மனதார காதலித்தேன் உன்னை
மாற்றி விட்டாய் என் மனதை நீ.

மாலை மாற்றி கொண்டாய்
உன் மாமனோடு..அங்கேயும்
மனம் மாறாமல் உன் மாமனுக்கு
மட்டும் மனைவியாய் வாழ்ந்து விடு..

மறக்க முடியவில்லை என்னால்
மன்னிக்கவும் முடியவில்லை என்னால்
என்ன மர்மம் செய்தாய் நீ
என் மனமே மயங்கியது உன்னால்..

எழுதியவர் : அ. மன்சூர் அலி..ஆவடி,.சென்னை (20-Jan-15, 4:07 pm)
பார்வை : 97

மேலே