போர்க்களம்

போர்க்களம்

ஒளியை காண துடிக்கும்
என் மன அலைகள்
என்னுள் அடைபட்டு
வெடித்து வெளியேற துடிக்கும்
எரிமலையின் பிழம்புகள் போலிந்த
சிந்தனை வரிகள்
அநீதி, அநியாயம் போன்ற
இழிவற்ற செயல்களை
கண்டிக்க துடிக்கும் தீபொறிகள்,
கனவு காண கவிஞனுக்கும்
அருகதை உண்டு என
ஊக்கம் உவிக்கும் எனது உள்ளம்
அரை தூக்கத்திலிருந்து
எழுந்திருடா என விழுப்புணர
விழைக்கும் என் மன அதிரல்,
போராட புறப்படுவோம் என
தாக்க துடிக்கும் என் எழுதுகோல்
தட்டி எழுப்பி தளம் சேர்த்திட
அழைக்கும் எனது ஊக்கம்,
பீரங்கியிலிருந்து வெளிப்பட்ட
குண்டு போன்ற எனது வேகம்,
எழுத முனைந்துவிட்டேன்
போராட துணிந்துவிட்டேன்
வருவாயா என்னுடனே
எதிரிகளை அழிக்க
போர்களத்திற்கு?

சம்பத்

எழுதியவர் : கல்கத்தா சம்பத் (18-Apr-11, 4:24 pm)
சேர்த்தது : sampath kolkata
Tanglish : porkkalam
பார்வை : 282

சிறந்த கவிதைகள்

மேலே