கண்ணம்மா - VI
கண்ணம்மா - VI
உந்தன் கடைக்கண் விழிதனின்
பார்வைக்கு நான் ஏங்க,
கருமேகங்கள் அரவணைக்க
சிலிர்த்தெழுந்த மின்னல்போல்,
ஓர் கணம் தோன்றி நீ
உடனே மறைந்து பறக்கின்றாய்;
காலமெல்லாம் நான் காத்திருந்தும்
கண்ணம்மா, நீ,
கானல் நீரினைப்போல்,
காத தூரமதில்,
கண்ணாமூச்சி விளையாடி,
கண்ணிமைக்கும் நேரமதில்,
காற்றுடன் கலந்தோடி,
மறைந்தோடி செல்கிறாய்;
உணர்ச்சியற்று மறித்திருந்த,
நீ சென்ற பாதையின் மண்,
உன் பாத உணர்வு பெற்று,
புத்துயிர் அது பெறவும்,
அத்தகுதி நான் அடைய,
மனம் மருகி வேண்டுகிறேன்;
கண்ணம்மா உந்தன் புரியாமை
குளிர் நிலவினையும்
பாலைவன வேனிற் போல்
உள்ளமெனதை தகிக்கிறதே;
குளிர்ந்த தடாகத்தண்ணீரதுவும்
வேகும் சுன்னாம்புக்களவாய்
போன்று உடலெனதை தகிக்கிறதே;
நிலை எனதை நீ புரிந்து
துரிதே நீ உடன் வருவாய்.
காலமெல்லாம் காத்திருப்பேன்
கண்ணமா உனக்காக!
சம்பத்