கொஞ்சம் யோசியடா - மண் பயனுறவேண்டும்

மதுவுக்கு அடிமை ஆன உன்னக்கு
மனமுள்ள மனைவி ஏனடா உன்னக்கு
கள்ளச்சாராயம் குடிப்பேயடா - அவள்
கண்ணீர்சிந்தி அழுவாளடா
எத்துனை உயிர்கள்
எதுன்னை மனங்கள்
மதுவால் மடிந்து போனதடா
வாழ்கையும் கெட்டு
வளங்களும் கெட்டு
மண்ணில் மடிந்து போனதடா
மதுவை விட்டு வெளிவந்தால் - அட
மகிழ்ச்சியான வாழ்வுண்டு
மனைவியும் கண்டு மகிழ்வாளே - அட
நேர்த்தியான உனைகண்டு
கள்ளச்சாராயம் வேண்டாமடா - நீ
கஷ்ட்டப்பட்டு உழச்சுடுடா
கண்ணீர்சிந்திய நாட்களெல்லாம் - இனி
காலம் முழுவதும் சிறக்குமடா
இல்லத்தை நித்தமும் நேசியடா - உன்
இயலாமையை கொஞ்சமும் யோசியடா.....!

எழுதியவர் : கவிப்ரவீன்குமார் (1-Feb-15, 9:35 am)
சேர்த்தது : கவிப்ரவீன்குமார்
பார்வை : 99

மேலே