நெஞ்சு பொறுக்குதில்லையே - மண் பயனுற வேண்டும் கவிதை போட்டி

குழந்தைக்குப் பெயர் திரிசா -பின்
தேயாதோ தமிழும் சிறுசா?..
கானலின் மேல் மையல் கொண்டான் - அதில்
ஊனமாக்கித் தமிழைக் கொன்றான் ...

கொஞ்சம் நீரும்
குப்பைகள் நிறையவுமாய்
கூவமானது தமிழ் ...
முத்தப் போராட்டத்தில்
முதல் ஆளாய் தமிழன் ...

நிராகரிக்கப்பட்ட தெய்வங்களில் ஒன்றாக
நிர்கதியாய் தமிழன்னை ...
மோனலிசா ஓவியத்துக்கு
முந்தானை வரைகிறான்
முத்தமிழ்ப் புலவன்...

ஈழமும் காவிரியும்
எப்பொழுதும் வேண்டும் ...
இவர்கள் தமிழரென்று
இறுமாப்பு கொள்ள...

நெஞ்சு பொறுக்குதில்லையே - இந்த
நிலைகெட்ட தமிழரை நினைத்துவிட்டால்

எழுதியவர் : செல்வா பாரதி (1-Feb-15, 3:18 pm)
பார்வை : 133

மேலே