மகா கவி
![](https://eluthu.com/images/loading.gif)
மகா கவி...!
என்னில் -
உறக்கத்தின் பொழுதும்
உள்ளங்கை ரேகையாய்
ஊர்ந்து கொண்டிருத்த
உயிரின் உணவே...!
என்னுள் -
விதை உறக்கம் கலைத்து
விளைச்சலை விளைவித்த
விஞ்ஞான நிலமே....!
எனது -
கவிதை வேள்வியில்
மருக்கொழுந்து ஆகுதியான
மொழியின் மூலமே...!
தமிழின் நாதமே...!
பாரத தீயாய் -
பார் அதிர ...பாடி வென்று...
நின்ற நின் பா...
ரதியெனவே ...
தோன்றுவதால் - நீ
பாரதியோ...!