வானம் பார்த்த பூமி
வானவில் மேடை அமைத்து
மின்னலிலே வெளிச்சம் கொடுத்து
மேளம் என்னும் இடி ஓசை முழங்க
வண்ணமயில் தோகை விரித்து
நடனமாட கார்மேகம் கண்குளிர்ந்து
ஆனந்த மழை பொழிய வானம்
பார்த்த பூமியாய் இருந்த
வயல் வெளிகள் மகிழ்ச்சி
அடைந்தது ..இதை பார்த்த அரை ஆடை
உடுத்திய உழவன் உள்ளமும்
மகிழ்ந்தது ...