விவேக் பாரதியின் வெண்பா -1 ப்ரியாராம்

பல விகற்பா இன்னிசை வெண்பா
============================
ஈற்றடித் தந்த இளைய கவியேநம்
நற்றமிழ் போற்றும் கனகமே - அன்னையைப்
போற்றிப் பணிந்து வடிக்கும் கவியில்நீ
குற்றத்தைக் கண்டு களை

(அன்னை -சியாமளா ராஜசேகர் அம்மா)

கோதையர் போற்றும் குலமகனே கண்ணாநீ
பேதையர் நெஞ்சைப் பிளப்பவனே -மன்னாஉன்
கன்னமோ கள்ளூறும் கிண்ணமே காவியமே
கண்ணே கனிரசமே நீ !

நன்மையை நாடியே, தீமையைச் சாடுவோம்;
அன்புமைத் தீட்டியே, பண்பினைப் பாடுவோம் ;
தேயாத அன்பாலே, காயாத வண்ணத்தில்
செய்வோமே நூறு கவி

எழுதியவர் : பிரியாராம் (10-Feb-15, 4:56 pm)
பார்வை : 96

மேலே