---------முதல் பயணம் உன்னுடன்--------

சிற்றுருந்து ஒன்றில் முதன் முதலில் - உன்னை கண்டேன்
சிறகடித்து பறக்கும் பட்டத்துப்பூச்சியாய்
விண்ணில் பறந்தேன் -நான்...!

ஒர் நிமிடத்தில் எத்தனை வார்த்தைகள் பேசும் யடி - உந்தன் கண்...
மொழிபெயர்க்க வழி தெரியமால்
உன் விழியை ரசித்து என் விழியை மறந்தேன்..!

உன் அகஅழகை காண முன் வந்து விழும்
காதரோ முடியை செல்லமாய் நீ வருடிவிடுவது
எந்த கலையடி..அல்லது - எந்த சிற்பத்தின் சாயலாடி..!

உதட்ரோ புன்னகை மேகத்தை துளைத்த மின்னல்
நீ பேசும் பேச்சு மழையின் சங்கீதம்,
ரசிக்க ரசிக்க ராகங்களும் கவிக்கூயிலும்
கூவிக்கொண்டே இருக்கிறது - என் மனதில்..!

உன் சுவாச காற்றின் சூட்டில் குளிர் காய
மனம் ஏக்கம் கொள்ள ஆரம்பித்தது,..
உன் தலை சாய என் தோள் காத்து நிற்கிறது,..
உன் கரம் பிடிக்க என் விரல்கள் தேடுது..

மொத்தத்தில் மொத்தமாய் என்னை தொலைத்தேன்
உன்னில் என்னை கண்டுக்கொள்ளலாம் என்ற ஆசையில்
என் வாழ்வில் நீ இருப்பாய் என்றும்
உன் வாழ்வில் மீதம் நான் இருப்பேன் - என்றும்

பயணத்தை தொடருகிறேன்...♥

ஃதங்கம்

எழுதியவர் : தங்கம் (12-Feb-15, 12:21 pm)
பார்வை : 492

மேலே