ஏனோ ஒருகாதல்--1

*****ஏனோ ஒருகாதல்--1*****

கருவறையில் இருந்தபோது
சுமந்தவளின்
கை வளையல் ஓசையின் மீது
ஏனோ ஒருகாதல்....
------------
பூமிபார்த்த முதல்நாள்
உச்சி முகர்ந்த அப்பாவின்
மூச்சுக்காற்றின் மீது
ஏனோ ஒருகாதல்.....
-------------
எட்டடி வைக்க
ஏணியாய் நின்ற அந்த
நடைவண்டியின் மீது
ஏனோ ஒருகாதல்......
------------
பாட்டி வீடு செல்லையில்
பாதையெல்லாம் வந்த
பால்நிலாவின் மீது
ஏனோ ஒருகாதல்......
---------------
ஐந்து வயதில்
அரிசியில் எழுதிய -அந்த
"அ" வின் மீது
ஏனோ ஒருகாதல்......
-----------
அம்மாவிடம் அடிவாங்கியும்
ஆசையாய் தின்ற -அந்த
குச்சி ஐஸின் மீது
ஏனோ ஒருகாதல் ......
----------
அத்தையும் மாமாவும்
சித்தியும் சித்தப்பாவும்- சேர்ந்து
வந்தசுற்றிய ஊர்த்திருவிழாவின் மீது
ஏனோ ஒருகாதல்......
--------
மலரும்......

எழுதியவர் : சுடர்விழி.இரா (13-Feb-15, 1:21 pm)
பார்வை : 108

மேலே