தெருவில் என் தேவதை

இதுவரை களித்த
நாட்களை கொண்டு
இன்றைய கஷ்டங்களை
கழிக்க முடியவில்லையே..
என்னை மட்டுமே
உலகமென சுற்றிவந்த இவள்
இன்று என்கண்களால் மட்டும்
உலகை பார்க்கிறாள்..
அம்மன் தேரோட்டம்
உங்களுக்கு வருடமொருநாள்
என் தேவதையுடன்
நாள்தோறும் வீதிவுலா செல்லும்
எனக்கு இனிக்கவில்லை
என்றாலும் கசக்கவில்லை..