மழையமுதே

மழையவள்....!

விண்னகம் தரும் -
கொடையே...!

மண்னகம் பெறும் -
யாசக மழையே....!

நீலவான் வெளியின்
மேகநீர் நதியே....!

மின்னல் கீற்றென
பின்னலிடும் ஒளியே..!

மேள தாள நடையாய்
நுடங்கும் மேதினி இடியே..!

உன்னில் நனைந்து
கரையாத -
இந்த மண்ணை..
என்னை....!

சந்தனச் சாரலாய்
தொடு வதேன்....?
மெல்ல -
சுடுவதேன்....!

எழுதியவர் : இராக. உதய சூரியன். (13-Mar-15, 11:47 pm)
பார்வை : 282

சிறந்த கவிதைகள்

மேலே