குருட்டுக் காதல்
ஒரு திரையில் வரும்
கதாநாயகனை போல்
ஒருத்தரை காதலித்தேன்.
விழித்திரையில் விழும்
கவிதையை போல்
வீரனை ரசித்தேன்.
விடுதலையடையும்
சிறகு போல்
இதயம் துடித்திட இருந்தேன்.
வசீகரனை வசியம் செய்ய
வசியவிழிகளில்லாமல்
குருடி எந்தன் கனவு
ஒருதலைக்காதலானது.
காதலின் நிறம் என்னவோ
கவிஞர்களே பதிலுரையுங்கள்!?