இழிவானவர்கள்

இரு கை நீட்டி
இரந்து நின்றேன்!
இழிவான நிலைக்கு
வந்துவிட்டோம் என
வருந்தினேன்!
ஒரு நாளெல்லாம்
அமர்ந்தும்
நீட்டிய கை
நீட்டியபடியே தானிருந்தேன்!
ஒன்றும் கிடைக்கவில்லை
என்னை விட
இழிந்த நிலையில் தான்
மற்றவர்கள் என்பதை
புரிந்து கொண்டேன்.

எழுதியவர் : சுமித்ரா விஷ்ணு (19-Mar-15, 6:38 pm)
சேர்த்தது : சுமித்ரா விஷ்ணு
பார்வை : 53

புதிய படைப்புகள்

மேலே