தாயின் குரல்

-தாயின் அழுகுரல்-

வாய்தாக்கள் வாங்குமவன்
வழித்தேடி வருவானென
தீராத வழக்கைப்போல்
தினம்தோறும் நிற்கின்றாள்

முதியோரின் இல்லத்தில்
மடிந்துபோகும் நேரத்திலும்
முகம்சுழித்துப் போவானோ
முகவரியை மறைத்துவிட்டு

அத்தனையும் அவனுக்காய்
அள்ளித்தந்த அன்னையவள்
ஆசைகளைத் திறக்கின்றாள்
ஆயுளது போதுமென்று..!

எழுதியவர் : ராக்கிங் ஜாக் (21-Mar-15, 10:51 am)
பார்வை : 241

மேலே