மரமாய் துணிவை நடு

எப்படியும் வாழலாம் என்ற நிலைமாற்றி
இப்படித்தான் என்னும் விதிசெய்தே – முப்பொழுதும்
அந்த அறமொழுகி ஆனந்த பூங்காற்றின்
நந்த வனம்நீ சமை.
நேற்றெவரோ செய்த நிலையற்றக் காரியத்தின்
ஊற்றொழுகும் நீரின் உவர்ப்பகற்ற –ஆற்றும்
கருமம் அகிலம் கடைபிடிக்க மூட்டும்
நெருப்பின் ஒளியாய் நிலை.
உலகம் விரும்பும் உயர்வு நிலைக்கு
நிலவின் பொழுதாய் இருந்து .- நிலவும்
பழமை இருளுள் பதுங்கிக் கிடக்கும்
வழக்கம் அடித்து விரட்டு.
மடுவை எடுத்து மலையாய் சமைத்து
கொடுக்கும் திறமை வளர்த்து – நடுநீ
அதன்மேல் மரமாய் உனதின் துணிவை
அதர்மம் வளர்தல் தடுத்து.
மெய்யன் நடராஜ்