வல்லமை தாராயோ

தனி ஒருவனுக்கு......
வேண்டாம் பாரதி..
ஜகமே உணவில்லாமல்தான்
அழியப் போகிறது....

அக்கினிக் குஞ்சொன்று....
நானும் கண்டேன்...
ஐ பேட் ஆங்கிலத்தில் நான்
ஆங்ரி பேர்ட் என்றது....

தேடிச் சோறு நிதந் தின்று....
வாக்கு பலித்தது..
சுற்றிலும் பீட்சா பாஸ்தாக்
கடைகள்....

சாதிகள் இல்லையடி....
நீக்கிவிட்டு புத்தகத்தில்
காயத்திரி மந்திரம்
வைக்காலாமென பரிந்துரைக்கப்படுமோ....?
உப்பு சர்க்கரை
அளவு குறையுமாமே.....

வல்லமை இழந்திட்டேன்..
சொல்லடி சிவசக்தி
சுடர்மிகு அறிவு... இன்னும்
என்னுள் இருக்கிறதா...........?

எழுதியவர் : நல்லை.சரவணா (23-Mar-15, 8:44 am)
பார்வை : 3003

மேலே