கவலை

கவலை!

காற்றடைத்த பை இது-
கவலைகளை சுமப்பது-
நூலறுந்த பட்டமென
துன்பங்களில் துவளுது!

சூழ்நிலைகளின் கைதி இது-
சூட்சுமத்தால் திணறுது-
காரிருளில் மூழ்கிப்போய்
பேரொளியை மறக்குது!

நிலையற்ற உடலே இது-
நிம்மதியை நாடுது-
எல்லாமே எதிரிருந்தும்
ஏக்கத்தாலே வாடுது!

இருப்பதையே இன்பமுடன்
ஏற்றுக்கொள்ளும் பக்குவம்
இருந்துவிட்டால் மானுடர்க்கு
கவலைகளும் கண்ணாமூச்சியே!

கவலைகளும் ஆனந்தமும்
உள்ளத்தில் ஒன்றாகட்டும்!
இரவும் பகலும் போலே
இயற்கையாய் நிகழ்ந்திடட்டும்!

சோ.சுப்பிரமணி, குவைத்
23-03-2015.

எழுதியவர் : சோ.சுப்பிரமணி, குவைத் (23-Mar-15, 3:17 pm)
சேர்த்தது : சோசுப்பிரமணி
பார்வை : 79

மேலே