காதல் அனுபவம்

வீட்டை எதிர்த்து காதலனோடு ஓடிவந்தேன்
காலமும் போனபின்னே அதை நினைத்து வாடிநின்னேன்
சாப்பிட ஒருவாய் சோறில்லை வீட்டிலே
கட்டியவனும் பொருப்பின்றி போதையில் நடுரோட்டிலே
உறவுன்னு சொல்லிகொள்ள எங்களுக்கு யாருமில்ல
நகைநட்டு சொத்துபத்துனு கையில ஏதுமில்ல
என்ன பெத்தவங்களுக்கோ நெஞ்சுல ஈரமில்ல
குழந்தையின் பசிக்கோ மார்புல துளி பாலுமில்ல
அம்மா அப்பா பேச்சை நானும் கேட்கவில்ல
இப்போ இரா பகலா எனக்கும் தூக்கமில்ல
குடிகாரன கட்டிக்கிட்டு என்ன சுகத்த நானும் கண்டே
பல ஆம்பிளைங்களோட பார்வையில தல கோணி நிண்டே
கண்ணம்மா பெத்த பொண்ணு மருவுக்கு வந்து நின்னா
கரி சோறும் மீன் சோறும் சமைச்சு வைப்பா
என்ன மட்டும் அவ வீட்டு துணிய துவைக்க வைப்பா
வீட்டுல பாத்தவன நானும் கட்டி இருந்தா
என் வாழ்கையும் இதுபோல இருந்து இருக்கும்
அவன மட்டும் பிடிக்கும்னு அவன நம்பி வந்தே
இப்போ வாழ்கையே பிடிக்காம கலங்கி நின்னே
என் தலையெழுத்து இதுதான்னு மனச தேத்திகிட்ட
கண்ணம்மா வீட்டுல வேலைக்கும் சேந்துகிட்ட
வீட்டுகாரறையா பார்வையோ கம்பளி பூச்சா ஊருது
ஊருக்குள்ள என் போலப்போ ரொம்ப நாறுது
முதலாளியம்மாகிட்ட இதைப்பற்றி சொல்லலான்னு தோணுது
சாப்பிடற சாப்பாடுக்கோ வேட்டு வந்துடுமோன்னு மனசு நோவுது
அறியாத வயசுல காதல் அதையும் பண்ணிவிட்டு
இப்போ இங்கே நிக்கற ரொம்ப அடிமைபட்டு
இந்த நிலைமை என் பொண்ணுக்கு வரக்கூடாது
எவ கண்ணும் அவ மேல படக்கூடாது
அவள நல்ல படிப்பு படிக்க வைக்கணும்
ஊர் உலகம் அவள மதிக்க வைக்கணும்
அதற்காகத்தான் இவ்வளவையும் தாங்கிகிட்டு
குடிகார பேச்சையும் கேட்டுக்கிட்டு
உயிரை கையில பிடிச்சுகிட்டு வாழற
என் கஷ்டத்த பாட்டா நா பாடற

எழுதியவர் : nanam (2-Apr-15, 3:07 pm)
சேர்த்தது : நான குமார்
Tanglish : KULANDHAIYIN mutham
பார்வை : 93

மேலே