எங்கு சென்றுதான் பிழைப்பது
மீன் பிடிக்க சென்றோம் சுட்டுகொண்றார்கள்
வெளிநாடு சென்றோம் விரட்டிஅடித்தார்கள்
சரி, வெளிமாநிலம் சென்று பிழைக்க நினைத்தோம்
கொலை செய்து குழியில் புதைத்தார்கள்
சரி நாங்கள் எங்கு சென்றுதான் பிழைப்பது? (உயிருடன்)
நிர்க்கதியாக நிற்ப்பவர்களுக்கு
வருத்தம் தெரிவிக்கவே
பல மணி நேரம் ஆகிறது இந்நாட்டில்
நீதி கிடைக்க?
ஒரு வேலை இறந்தவர்களில் ஒருவர்
அதிகாரத்தையோ
அரசியலையோ
சேர்ந்தவராக இருந்திருந்தால்
இந்நேரம் என்ன நடந்திருக்கும்
எளியவனுக்கு ஒரு நீதி
வலியவனுக்கு ஒரு நீதி
என்றா அரசியலமைப்பு இயற்றபட்டது?
நான் சட்டம் தெரியாதவன்
தெரிந்தவர்கள் பதில் சொல்லுங்கள் .....