காக்கை கார்முகில் கண்ணன்

காக்கை தலையில்
எச்சமிட்டது
நிமிர்ந்து பார்த்தேன்
வானத்தை !
சூழ்ந்திருந்த கருமுகில்
மழை பொழிந்தது
தலை தூய்மையானது !

காக்கையில் கண்ணனை
பார்க்கும் பக்குவம்
எனக்கில்லை பாரதி !
கார்முகிலில் நான்
கண்ணனைப் பார்க்கிறேன் !

~~~கல்பனா பாரதி~~~

எழுதியவர் : கல்பனா பாரதி (20-Apr-15, 3:17 pm)
சேர்த்தது : கல்பனா பாரதி
பார்வை : 89

மேலே