இரவுகளில் மௌன மழை

கொலுசின் முத்துக்கள்
குறையும் போதெல்லாம்
நினைத்துக் கொள்கிறேன்
உன் பாதச்சுவடுகளை
கண்ட மயக்கத்தில்தான்
விழுந்திருக்கும் எனையறியாது...!!

என் தோட்ட
பூச்செடிகளுக்கு இரண்டு
நாட்களாய் சுகமில்லை
பூக்கள் ஏதும்
மலராததால் வண்ணத்துப்பூச்சிகள்
கேட்டது "அவன் வரவில்லையா.."
இப்படியேதான்
பூக்களின் வண்ணம்
மெருகேறினாலும் "அவன் வந்தானா.."
என்று கேட்கும்...!!

நீ சகதியோடு
நடந்து சென்ற
இந்த வரப்புகள்
வெல்வெட்டோடு போட்டியிட்டு
வென்றதாய் உணர்கிறது
என் பாதங்கள்...!!

நீ கனவுகளில் வந்து
திரும்பி செல்ல
என்னை முந்தி
அழத் துணியும்
வளையல்களை மட்டுமேனும்
முடிந்தால் சமாதானம்
செய்துவிட்டு போ..
விடிவதற்குள் ...!!

இறுதியாய் நிலவும்
கதவடைத்துப் போக..
இரவுகளில் பொழிந்த
மழையாகவே இருந்துவிட்டு
போகட்டுமே உன்மீதான
எந்தன் காதலும்...!!

எழுதியவர் : manimegalai (29-Apr-15, 9:06 am)
பார்வை : 165

மேலே