வேண்டுவன யாதெனில்

மூச்சு காற்று புயலாகி
மெல்ல வலுவிழந்து தென்றலாகி
நின்று போகு முன்னே
மெத்தை ஒன்று வேண்டும்
உன்னோடு பழகிய நாட்களின்
நினைவுகளோடு அதில் நான்
மெல்லப் புரள வேண்டும்..
இன்ப அலையில் மூழ்க வேண்டும்.

என்னை ஒருமையில் நீ
அழைத்து குறும்பு மொழி பேசி
குலவிய காட்சிதன்னை
டிஜிட்டல் தரத்தினிலே
நான் கண்டு மகிழ வேண்டும்!

அப்போது..

மேகங்கள் சற்று நேரம் என் வீட்டின்
முன் நின்று போக வேண்டும் ..
குளிர் காற்றும் அங்கு வீச வேண்டும்..
மழை எனக்காக நின்று பெய்தல் வேண்டும்..
நீ அங்கு நேரில் வந்தது போல்
இருக்கும் நிலையினை
நான் அனுபவிக்க வேண்டும் ..
எந்தன் நெஞ்சுக் கூட்டுக்குள்
தஞ்சம் புகுந்த உன் நேசம்
ஊஞ்சல் ஆட வேண்டும்!

இந்த நினைவோடு எந்தன் இதய
தீபம் அணைய வேண்டும்..
மறந்த கதைகள் யாவும்
மெல்ல மறைகின்ற நேரம் தன்னில்
எந்தன் உயிர் போக வேண்டும்..
எங்கு நீ இருந்தாலும்
உந்தன் உயிரில் அது கலக்க வேண்டும்..
பின் உன்னோடு மடிய வேண்டும்!

எழுதியவர் : கருணா (4-May-15, 2:46 pm)
Tanglish : venduvana yaadhenil
பார்வை : 164

புதிய படைப்புகள்

மேலே