கவிக்குழந்தை

என் கற்பனையில் கருத்தரித்து
என் சிந்தனையில் உருவெடுத்து
என் நாவில் பிறப்பெடுத்து
என் சின்ன கரங்களால் உயிர் பெற்றது
பெயருக்கு எழுதவில்லை ...... கவிதை !!!!
பெருமைக்கு சொல்லவில்லை அதன் அருமை !!!!!
மனம் ரணமானது _ அதில்
என் கண்ணீர் குடமானது !!!
அந்தக் குடத்தில் குளித்து
வந்தவள் அல்லவா
என் கவிக் குழந்தை !!!!!!!!!


படித்ததில் பிடித்தது ........

எழுதியவர் : பொன்மொழி (18-May-15, 7:16 pm)
பார்வை : 106

மேலே