இனி எதையும்

தேடலின் பொழுதுகளை
முடக்கிப் பறந்து
மன்னிக்காத வேகமெடுக்கும்
சுகப்படாத சொற்களுக்கிடையில்

கொத்தித் தின்று ஆசுவாசப்படும்
ஊமைப் பார்வைகளிலிருந்து
அணையாதிருக்க

யதார்த்தமாய்த் தவறுகளையோ
தடுமாறல்களையோ
பாரபட்சமின்றிச் சேமிக்கின்ற
கேமராக் கண்கள்
இனி எதையும் விட்டு
வைப்பதாயில்லை.

எழுதியவர் : சர் நா (21-May-15, 7:49 pm)
பார்வை : 206

மேலே