இலக்கியம் எனப்படுவது

நிசங்களை எடுத்து
விசங்களை நீக்கி
மருந்தாய்த் தருவது -இலக்கியம்

நிந்தனை சிந்தனை
முந்திடும் இவர்கள்
ஏனோ திருந்தல -விளக்கியும்

காமம் கூறும்
கவிதைகள் கோடி
கண்டது தான்நம் -தமிழினம்

ஆனால் அதிலும்
அழகிய ஒழுக்கம்
அடைவது தானே -இலட்சியம்

ஆடைகள் களையும்
பாடல்க ளாலே
அலங்கோ லம்தான் -நிகழ்ந்திடும்

தேடல்கள் கூடித்
தேறிடத் துடிக்கும்
நாளைய உலகம் -இகழ்ந்திடும்

அறிவை அன்பை
வளர்க்கும் கவிதை
அனுதினம் செய்திடல் -கடமையே

அங்கம் பற்றியே
அதிகம் பாடி
அசிங்கம் விளைத்திடல் -மடமையே

நிசங்களை எடுத்து
விசங்களை நீக்கி
மருந்தாய்த் தருவதே -இலக்கியம்

எழுதியவர் : அபி மலேசியா (24-May-15, 11:05 pm)
பார்வை : 82

மேலே