மரமும் மனிதனும்

மனிதராகிய நாங்களும்
சுற்றி வரும் கோள்களும்
வேரற்று வாழ்ந்து வருகிறோம்
ஆனால் நீ மட்டும்
எங்கள் மத்தியில் வேருன்றி நிற்கிறாய் எப்படி??

நாங்கள் எம்முயற்சி செய்து மழையை அழைத்தாலும்
நீ அசைந்தால் தான் வருகிறது எப்படி ??

இதை அறிந்தும் மனிதன் உன்னை
வெட்டி சாய்க்கிறானே ஏன் ??

நாங்கள் வாழ காற்று கொடுத்த உனக்கு
நீ வாழ நீருற்ற மறந்தோம்

நீ இருக்கும் வரை தான் மனிதன்
என்பதை அறிந்தும்
உன்னை அழித்துக்கொண்டிருக்கும் எங்களுக்கு
எத்தனை நாள் தான் பொறுமையாய் பயனளிப்பாய் ??

மனிதன் ஒவ்வொருவரும் உன்னைப்போல்
வேருன்றி வாழும் வரை
நிலையற்ற இவ்வுலகில்
திறனற்ற மனதோடு
வாழ்கையில் தோற்று
பயனற்று மடிவான்
என்பதில் சந்தேகமில்லை..

எழுதியவர் : (29-May-15, 3:11 pm)
Tanglish : maramum manithanum
பார்வை : 818

மேலே