இவன் பித்தனாக ~ சந்தோஷ்
உஷ்.!. யாரும்தொடாதீர்கள் !
எனது காதல் புத்தகத்தை..!
நான் பதுக்கிவைத்த
கனவு மயிலறகு
பிரசவ வேதனையிலிருக்கிறது. !
----
அடேய் ! துரோகியே!
என் பின்னால் வாராதே !
என் நிழலை
நீ மிதித்தால்
அழுதுவிடும் என் நிஜங்கள் !
----
அடியே !
என் காதலியே!
நான் உனக்கு கொடுத்த
கணக்கற்ற முத்தத்தை
திருப்பிக்கொடு..!
ஈரமற்றவளிடம்
ஈரமுள்ள என் முத்தமெதற்கு ?
----
என் நட்புப் பேனாவிற்குள்
சிலச் சொட்டு
தோழ’மை ஊற்றுங்கள்
தோழர்களே !
என்னிதயப் பறவைக்கு
வானம் தேவைப்படுகிறது.
---
அங்கே என்னச் சத்தம்
கவிப்பேரரசு வைரமுத்துவே ?
கொஞ்சம் பொறு !
போட்டி வைத்துக்கொள்வோம்.
உன்னை மடியிலேந்திய
தமிழன்னை
என் சுண்டு விரலையாவது
பிடிக்கதான் போகிறாள்.
--
சரித்திரத்தை திருப்பி
வழக்குத் தொடுப்பேன்!
ஆசைகள் துறக்க
ஆசைப்பட்ட புத்தன்
ஆசை துறந்தவனா?
---
-இரா.சந்தோஷ் குமார்
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
