பள்ளிக்கூடம் திறந்தாச்சு

ஒரு மாதம் பரோலில் வந்த
குழந்தைகள்
மீண்டும் சிறகொடிந்து
சிறைக்கு திரும்புகிறார்கள்....
இங்கும் தப்பி ஓட முடியாத
மதில் சுவர் உண்டு...
இங்கும் வார்டன் உண்டு
இங்கும் சீருடை உண்டு
இங்கும் மணி அடித்தால் தான் சோறு..இங்கும் ஆயுள் தண்டணை தான்
பால்யம் தொலைத்து
பவ்யம் காட்டும்
பாவ.... நிலை

எழுதியவர் : சித்ரா ராஜ் (1-Jun-15, 8:26 pm)
பார்வை : 125

மேலே