யாருக்கு என்ன குடுத்த
ஒருவர் : எனக்கு நேர்ந்து கிட்ட நேர்த்திகடனை செலுத்துற வரைக்கும் கடனுக்கு வட்டி குடுன்னு என்னோட குல தெய்வம் தினமும் கனவுல வந்து இம்சை பண்ணுது சார்.
எஸ்.ஐ : ஒண்ணும் கவலைப்படாதீங்க. எனக்கு வெயிட்டா மால் வெட்டினீங்கன்னா உங்க குல தெய்வத்து மேல கந்து வட்டி கேஸ் புக் பண்ணிடுறேன்.
-------------
இளைஞன் : ஆன்மீக பெரியவங்க சொல்றது மாதிரி எதையும் நமக்குன்னு வச்சிக்காம அடுத்தவங்களுக்கு குடுக்கறது தப்பா சார்?
எஸ்.ஐ : ரொம்ப நல்லதுய்யா! உனக்கு நிறைய புண்ணியம் சேரும். யாருக்கு என்ன குடுத்த?
இளைஞன் : இந்த பொண்ணுக்கு தான் சார். முத்தம் குடுத்தேன்.