ரா-பகலும் உன் நினைவு,,,,,

காக்கை கரையும் காலை பொழுதில்,
கன்னி உன்னை காண வந்தேன்;
மாகோலம் போட நீ வந்தாய்,
மௌனமாய் நின்றேன் கடை எதிரில்;
---உன் கருங்கூந்தல் அழகினிலே
கனிந்த என் இதயம், உன் கையினிலே....!
மயில் ஆடும் மாலை பொழுதில்,
மங்கை உன்னை காண வந்தேன்;
தண்ணீர் குடம் எடுத்து நீ வந்தாய்,
தள்ளி நின்று ரசித்தேன் அக்கரையில் ;
---என்னை கண்டு நீ மனமுவந்து நாண
உன்னை கண்டு நான், மனம் இழந்து போனேன்....!
உறவு கூடும் இரவு பொழுதில்,
உயிரே உன்னை காண வந்தேன்;
உன்னதமான நம் காதலை
உன்னிடத்தில் உரைக்க வந்ததேன்;
என் வரவை நோக்கி காத்திருந்தன
உந்தன் கண்கள் ..................
உன்னை கண்டதும்,
உடல் முழுவதும் உஷ்ணம் ஏறி,
உலகை மறந்து நின்றேன் - உன் காதலுடன்......!
------ பாலா ..........!