புதைத்தேப் போவாயோ

வானம் பார்த்த
விவசாயியின் காலடியில்
விதை முத்தாய்
நீர்த்தூரல்
விழுந்தது
நெல் முத்துமல்ல - மழை
நீர் முத்துமல்ல
அவன் கண்ணீர்
முத்துகள்
மண்ணை முத்தமிட வேண்டிய மழை
கண்ணை முத்தமிட்டதால் சத்தமின்றி
ஒரு இடி ஏழையின் இதயத்தில்
விதைத்துக் காத்திருக்கிறேன் என்னைப்
புதைத்தேப் போவாயோ மழையே!

எழுதியவர் : சுமித்ரா விஷ்ணு (9-Jun-15, 8:31 pm)
பார்வை : 100

மேலே