தத்துவச் சாரலிலே ஆதி சங்கரரின் பஜ கோவிந்தம் 1

பஜகோவிந்தம் பஜகோவிந்தம்
என பாடிடு தினமும் மூட மனிதா

யாவையும் படித்த முடித்த உன்னறிவு
கண்மூடும் வேளையில் காத்திட வருமா ?

பஜகோவிந்தம் பஜகோவிந்தம்
என பாடிடு தினமும் மூட மனிதா !
_____தமிழில் கவின் சாரலன்

கவிக் குறிப்பு :சங்கரரின் பஜகோவிந்தம் என்ற ஞானப் பாவின்
முதற்பா .அதன் சாராம்சம் கொண்டு தமிழில் தந்திருக்கிறேன்
காதல் தென்றல் வீசும் கவித் தளத்தில் சற்று ஞானத் தென்றலும்
வீசட்டுமே என்ற ஓர் இலக்கிய அவா .அவ்வளவுதான்.

எழுதியவர் : ஆதி சங்கரர் தமிழில் கவின் (12-Jun-15, 9:51 am)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 102

மேலே