amma

காலை விழிப்பதில் சூரியனை தோற்கடித்து விடுகிறாள்
வாசற் கோலத்தின் சொந்தக்காரி
அன்பை பக்குவமாய் சமைத்து
பந்தி வைக்கிறாள்
கழுவிய பாத்திரத்தின் சொந்தக்காரி
கல்லூரிக் கட்டணத்தை கஷ்டத்திலும்
கட்டி விடுவாள்
நகையில்லா கழுத்தின் சொந்தக்காரி
குடும்பக் கோவிலை நினைத்தே
நோன்பிருக்கிறாள்
நேர்த்திக் கடன்களுக்கு சொந்தக்காரி
என் பாதங்களை வெயில் படாமல்
சுமந்து கொள்கிறாள்
வெற்றுக் கால்களின் சொந்தக்காரி
தன் ஆசைகளை பத்திரப்படுத்தி
பூட்டிக் கொள்கிறாள்
தூரத்து ஆசைகளுக்கு சொந்தக்காரி
தன் சொந்தங்களை விட்டு
தள்ளி நிற்கிறாள்
இல்லறத்தை தத்தெடுத்த குடும்பநலக்காரி

எழுதியவர் : (17-Jun-15, 5:57 pm)
பார்வை : 89

மேலே